(முதல் பாகம்) அரும்பு முகையாக அலர்ந்த செய்தி அளிக்கு தானாய் தெரிதல் போல் அன்பே, நம் அன்பை நமக்குள்ளே பகிர்ந்து கொண்டோம்… கம்பனிடம் கவி கற்க நித்தம் வந்து, சித்தம் நிறைந்து காதல் கற்பித்தாய் விழிவழி நாம் பேசிய காதல் மொழியை செவிவழி ஒட்டகூத்தன் ஒட்டு கேட்டானோ?? கோமகள் கரம் பிடிக்க கவிகோ மகன் கொண்ட… Continue Reading →
கம்பன் வீட்டு கட்டுதறியும் கவிபாடுமாம், கவிச்சக்கரவர்த்தியிடம் கவி படித்தாலும் நான் கவி பாட தொடங்கியது உன்னைக் கண்டுதான்… அரசவை காணும் ஆவலில் அரண்மனை வந்த நான் அதிரூபசுந்தரி உன்னைக் கண்டேன் அமரேசன் சபையிலிருந்து இறங்கியவளோ என அதிசயித்து நிற்கையில் அமராவதியென உன் பெயர் கூறிய தோழனை அமரனாவாயென வாழ்த்தினேன்! தங்க விதானத்தில் மன்னன் தந்தையின் கவிகளை… Continue Reading →
இரவின் ஒளியில் இருவரும் ரகசியங்கள் பேசினோம்… ஒட்டு கேட்க வந்த காற்றையும் ஒத்தி போக சொல்லி!! நின்னை மடி சாய்த்து நிலவொளியில் உறங்க வைக்கையில் நினைவில் ஒரு சந்தேகம்… “நிலவு ஏன் தேய்கிறது….??” தேவதை நீ அருகிலிருந்ததாலோ என்னவோ தேவன் தோன்றினான் என்முன்னே பதில் சொல்ல… உன் உறக்கம் கலைக்காமல் மென் குரலில் அளவளாடினோம்… “சாதாரணனின்… Continue Reading →
பள்ளியில் விழி பரிமாறி காதல் கொண்டு… விடுமுறைகளின் தனிமையை வெறுக்கையில் விமானங்களின் ஆக்கிரமிப்பு தொடங்கியது பெண்டு என வாசல் தாண்ட கட்டுப்பாடிட்ட குடும்பம் குடிபெயந்தது வீதிக்கு… பதுங்கு குழிக்கு பள்ளி இடம் மாறினாலும், உன் பார்வை கதகதப்பில் பாதுகாப்பாய்தான் உணர்ந்தேன்! விண்ணில் விண்மீன்கள் எண்ணி கொண்டிருந்த – ஓர் இரவு வீழ்ந்தன நெருப்பு பிழம்புகள்… இருநூறு… Continue Reading →
ஒரு இடத்தை சுத்த படுத்தி விட்டு அவன் அமரட்டுமென தள்ளி அமர்கிறாள் அவள்!!
© 2021 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑