மேற்கொண்டு படிக்கும் முன் தானை தலைவர் சாருவின் இந்த பதிவை படித்து விடுவது உடல் மனம் ஆன்மா ஆவி என்ற சகலத்திற்கும் நல்லது! ….பல விமர்சனங்கள் இருக்கிறது , அது அனைத்திற்கும் விளக்கமளிக்க ஆரம்பித்தால் நான் சைக்கோவாக மாற நேரிடும் என்பதால் இந்த வாசகர்களிடம் காசு கேட்டு வாங்கி ரெமி மார்டின் குடிப்பது , கால்வின் க்ளைன்… Continue Reading →
கவிதையில் கரு வேண்டும் சிலர்க்கு! புலன்கள் கொணர்ந்தவை எண்ணங்களுடன் புணர வேண்டுமே அதற்கு! எதையேனும் சொல்லவேணும் சிலர்க்கு! நான்கு பக்கங்களில் நச்சென கட்டுரை எழுதிவிடலாமே அதற்கு! எதுகை மோனைகள் கலந்து விளையாட வேண்டும் சிலர்க்கு! என்னை அன்னை வெம்மை ரம்பை என்பதற்கு அர்த்தம் தேடாமல் இருக்க வேண்டுமே அதற்கு! பல வாசிப்பு கடந்தும் புரியவே கூடாது சிலர்க்கு… Continue Reading →
day by day, day by day வாழ்க்கை பயணம் day by day என இதோ 21 வருடங்கள் கடந்து விட்டன…. கொஞ்சம் ஒதுங்கி நின்று அவதானிக்கையில், என்ன செய்தேன்.. என்ன செய்து கொண்டிருக்கிறேன்?? B.Tech முடித்தாய்று. WIPROவில் கிடைத்த வேலையையும், அயல்நாட்டில் MBA பயில கிடைத்த அழைப்பையும் மறுத்து திருச்சி பாரதிதாசன் மேலாண்மை… Continue Reading →
அது மழை பெய்து ஓய்ந்த ஓர் இரவு. பாதாள சாக்கடைக்கு தோண்டபட்டு அவசரகதியில் மூடியும் மூடபடாத சாலை வழி வீடு திரும்பி கொண்டிருந்தேன். செம்மண் கலந்து சாலை முழுக்க சேறால் நிறைந்திருந்தது. காய்ந்தது போல் தெரிந்த இடங்களில் கால் வைத்து பள்ளியில் கூட முயற்சிக்காத நீளம் தாண்டுதல் பழகிகொண்டிருந்தேன். சற்று பின் ஒருவர் வந்து கொண்டிருந்தார்…. Continue Reading →
டிவிட்டரில் 1000 followers கிடைத்ததுமே ரேணிகுண்டாவிற்காக எழுத நினைத்த பதிவு, 2000 கடந்து 2345 கடந்த பின்னும் தாமதித்து கொண்டே வந்து இன்று எழுத்தாகிறது. காட்சி 1: பள்ளியில் பக்கத்து கிளாஸ் பொண்ணுக்கு scrap எழுதியும், பக்கத்துல உட்காற பையனுக்கு testimonial எழுதியும் Orkutட்டும் கையுமாக கழிந்த பொழுதுகள் கல்லூரியில் பழங்கதையான பின்…. 2009ல் facebook… Continue Reading →
“நோய் நாடி நோய் முதல் நாடி” என்பது வள்ளுவன் வாக்கு. இதே வழியில் பெண்கள் மீதான வன்முறைகளை நோக்குவோமேனால்… கற்ப்பழிப்பு.. கற்பழிக்கும் எண்ணம் நோய் அல்ல… என்னை பொறுத்தவரை அது ஒரு நோயின் விளைவே. கொஞ்சம் ஆழமாகவே யோசிப்போம். கற்ப்பழிப்பு, பெண்ணின் மீதான பாலியல் வன்முறை அனைத்துமே பெண்ணை சக உயிராக மதிக்க இயலாத நிலையின்… Continue Reading →
இன்றிரவு ஆங்கில நாட்காட்டியில் ஒரு வருடத்தின் முடிவு! இதை தாண்டி என் வாழ்வில் இது எப்பொழுதும் ஒரு மைல்கல்லாக இருந்ததில்லை! — 老子(லாஓசி) (@_santhu) December 31, 2012 இப்படி நேத்து கீச்சிட்டு இப்ப புத்தாண்டு சிறப்பு பதிவு எழுதணுமான்னுதான் முதல யோசிச்சேன்… அதுலையும் பாருங்க நான் இணையத்தில் நுழைஞ்சு ஒரு வருஷம் கூட முடியல. பிழைகள்… Continue Reading →
சென்ஷேஷனலா ஒரு விஷயம் கிடைச்சுருச்சுனு பதிவு எழுதியே ஆகனுமான்ற எண்ணத்துலையே அமைதியா இருந்தேன்.. ஆனா அத தொடர்ந்து நடக்ற விஷயங்கள் எதுவும் என்ன சும்மா இருக்க விடமாட்டேன்து. ஜனநாயகத்தின் மூன்று தூண்களும் பழுதடைந்த நிலையில் நான்காம் தூணான ஊடகம் இந்த விஷயத்தை சரியாக கையாளுகிறதா?? கொலை, கற்ப்பழிப்பு ஏன் கற்ப்பழித்து கொலை அனைத்தும் நமக்கு… Continue Reading →
சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு உண்மை சம்பவம். கல்லூரி முடிந்து பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தோம். அரசு பேருந்துகளும் கல்லூரி பேருந்துகளும் சேர்ந்து ஜி.எஸ்.டி. நெடுஞ்சாலையில் சிறு வாகன நெரிசலை உருவாக்கியிருந்தன. ஒரு அரசு பேருந்தின் பின் இரண்டு இருசக்கர வாகன ஓட்டிகள் காத்து கொண்டிருந்தனர். அப்பொழுது எங்கிருந்தோ வந்த ஒரு லாரி கட்டுபாடு… Continue Reading →
பின்நவினத்துவம்,நவினத்துவத்தில் நுழையும் முன் ஒரு சின்ன முன் கதை சுருக்கம். நண்பனின் பரிந்துரையில் எஸ்.ராவின் உறுபசி படித்திருந்தேன். வழக்கமான கல்கி, ஜெயகாந்தன் மிஞ்சி போனால் சுஜாதாவை மட்டுமே படித்திருந்த எனக்கு அது முற்றிலும் புதிய அனுபவம். புரியாமல் இல்லை ஆனால் புரிந்துகொள்ள பகீரத பிரயத்தனம் தேவையாக இருந்தது. அடுத்து வாசிக்க தொடங்கியது ல.ச.ராவின் அபிதா. நண்பனுடன் உரையாடுகையில்… Continue Reading →
(புதியவர்களுக்கு: டிஸ்கி=டிஸ்கிளேய்மர்=disclaimer) தேர்ந்த தமிழ் பதிவர்கள் ஒவ்வொரு பதிவுக்கும் தேவைக்கேற்ப டிஸ்கியிடும் பொழுது….பதிவுலகில் அடி எடுத்து வைக்கையில் பொதுவாகவும் சில விஷயங்களை சொல்லிவிட விரும்பியே இந்த பதிவு. பதிவுலகம் என்றல் என்ன.. ? இங்கிருக்கும் முறைகள் என்ன வழக்கங்கள் என்ன..? எதுவும் தெரியாமல் தான் அடியெடுத்து வைக்கிறேன்.. 7ம் வகுப்பு வரை மட்டுமே தமிழ் படித்ததால் (என்… Continue Reading →
இங்லிஷ் விங்லிஷ்…. நான் மொதமொதல பார்த்த ஹிந்தி படம். அதனால பதிவு எழுதியே ஆகணும்னு முடிவு பண்ணி….நீங்க இத படிச்சிகிட்டு இருக்கீங்க…! மேல இருக்குற படத்த பார்த்துட்டு தேவதர்ஷிணி எப்படி ஹிந்தி படத்துல நடிச்சாங்ன்ற கேள்வியோட சீட்ல போய் உட்காந்தேன்…..நல்ல கூட்டம்.. ஆனா என்ன வந்ததெல்லாம் பேமிலி வித் குட்டிஸ்..(ஃபிகர் இல்லன்ற கவலை என்னோட போட்டும்)….மொத… Continue Reading →
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முழு நீள நகைச்சுவை திரைப்படம்.. அதுவும் box officeல் சக்கைபோடு போடுகிறது. விமர்சனங்களும் சாதகமாகவே அமைய எதிர்பார்ப்பு அதிகரிக்கவே செய்தது. சார்லிசாப்ளின் அளவிற்கு இல்லையென்றாலும் இம்சை அரசன் அளிவிற்காவது எதிர்பார்த்தேன், இம்சைதான் மிச்சம்! ஒரு பெண், மூன்று காதலர்கள், கடைசியில் ஒரு ஜோடி….. மிக சாதரணமான கதையால் ரணபடுத்த முடியுமென… Continue Reading →
தமிழ் சினிமா உலகம் தலையில் வைத்து கொண்டாடிய படம். கண்டிப்பான தமிழ் வாத்தியாராக குற்றம் கண்டு பிடிக்கும் இணையவாழ் தமிழ் விமர்சகர்களும் தாராளமாய் பாரட்டிய படம் இந்த வழக்கு எண் 18/19. செமஸ்ட்டர் தேர்வு மற்றும் இன்ன பல காரணங்களால் படம் வெளிவந்து இரண்டு வாரம் கழித்து இன்றுதான் தேடி பிடித்து பார்த்தேன். இரண்டு வாரம்… Continue Reading →
(முதல் பாகம்) அரும்பு முகையாக அலர்ந்த செய்தி அளிக்கு தானாய் தெரிதல் போல் அன்பே, நம் அன்பை நமக்குள்ளே பகிர்ந்து கொண்டோம்… கம்பனிடம் கவி கற்க நித்தம் வந்து, சித்தம் நிறைந்து காதல் கற்பித்தாய் விழிவழி நாம் பேசிய காதல் மொழியை செவிவழி ஒட்டகூத்தன் ஒட்டு கேட்டானோ?? கோமகள் கரம் பிடிக்க கவிகோ மகன் கொண்ட… Continue Reading →
கம்பன் வீட்டு கட்டுதறியும் கவிபாடுமாம், கவிச்சக்கரவர்த்தியிடம் கவி படித்தாலும் நான் கவி பாட தொடங்கியது உன்னைக் கண்டுதான்… அரசவை காணும் ஆவலில் அரண்மனை வந்த நான் அதிரூபசுந்தரி உன்னைக் கண்டேன் அமரேசன் சபையிலிருந்து இறங்கியவளோ என அதிசயித்து நிற்கையில் அமராவதியென உன் பெயர் கூறிய தோழனை அமரனாவாயென வாழ்த்தினேன்! தங்க விதானத்தில் மன்னன் தந்தையின் கவிகளை… Continue Reading →
இரவின் ஒளியில் இருவரும் ரகசியங்கள் பேசினோம்… ஒட்டு கேட்க வந்த காற்றையும் ஒத்தி போக சொல்லி!! நின்னை மடி சாய்த்து நிலவொளியில் உறங்க வைக்கையில் நினைவில் ஒரு சந்தேகம்… “நிலவு ஏன் தேய்கிறது….??” தேவதை நீ அருகிலிருந்ததாலோ என்னவோ தேவன் தோன்றினான் என்முன்னே பதில் சொல்ல… உன் உறக்கம் கலைக்காமல் மென் குரலில் அளவளாடினோம்… “சாதாரணனின்… Continue Reading →
பள்ளியில் விழி பரிமாறி காதல் கொண்டு… விடுமுறைகளின் தனிமையை வெறுக்கையில் விமானங்களின் ஆக்கிரமிப்பு தொடங்கியது பெண்டு என வாசல் தாண்ட கட்டுப்பாடிட்ட குடும்பம் குடிபெயந்தது வீதிக்கு… பதுங்கு குழிக்கு பள்ளி இடம் மாறினாலும், உன் பார்வை கதகதப்பில் பாதுகாப்பாய்தான் உணர்ந்தேன்! விண்ணில் விண்மீன்கள் எண்ணி கொண்டிருந்த – ஓர் இரவு வீழ்ந்தன நெருப்பு பிழம்புகள்… இருநூறு… Continue Reading →
© 2022 பிழைகள் — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑